‘சாப்பாடு இல்லை, வாடகை கொடுக்க பணம் இல்லை’ இசைவாணி உருக்கம் – ‘பிக்பாஸ்’ 5 ப்ரோமோ ரிலீஸ்!
மக்களின் பேராதரவுடன் புதிய பொலிவுடன் மீண்டுமாக துவங்கியுள்ள ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ ஒன்று கண்ணீரும், அழுகையுமாக வெளியாகி தற்போது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
தற்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமுமாக ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி களைகட்ட துவங்கியுள்ளது. கடந்த 3ம் தேதியன்று கிராண்ட் லாஞ்ச்சுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 18 போட்டியாளர்களுடன் துவங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் முதல் நாள் அமைதியாக, சந்தோஷமாக முடிவுக்கு வந்துள்ளது. நேற்று தான் புதிய சீஸனின் முதல் நாள் ஆனதால் டாஸ்க் எதுவும் பெரிதாக துவங்கவில்லை.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளாத ஷகிலா மகள் மிளா – இதுதான் காரணமா?
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. நேற்று கொண்டாட்டமாக வெளியான ப்ரோமோவின் மாறுதலாக, போட்டியாளர்கள் தங்களது ஆரம்ப கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது போல இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிரபல கானா இசைப்பாடகி இசைவாணி, ‘எனது அப்பா ஹார்பர்ல வேலை பாத்தாங்க. அவங்களுக்கு திடீர்னு வேலை போச்சு. அதனால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாம கஷ்டப்பட்டோம்.
‘பாக்கியலட்சுமி’ ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
வாடகை கொடுக்காததால ஒவ்வொருவரும் வீட்டை விட்டு துரத்துனாங்க. எனக்கு நிறைய ட்ரெஸ் போடணும்னு ஆசை இருக்கும். ஆனால் ட்ரெஸ் இருக்காது’ என கண் கலங்கியவாறு தனது வாழ்க்கையின் சில சோகமான நினைவுகளை மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். இதை கண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டவாறு இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.