விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 25 நாட்களை கடந்த நிலையில், இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றிகண்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். தமிழில் விஜய் டிவியில் முதன்முறையாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் நடிகர் ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் ரித்திகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது சீசனில் முகின் டைட்டில் வின் செய்தார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்தார். ஐந்தாவது சீசனில் நடிகர் ராஜு டைட்டில் வின்னர் ஆனார்.
மது அருந்தியவர் போல் நடிக்க “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்!
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது. பல புதுமைகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் எலிமினேட் ஆகி 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வாரம் முதல் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார்.
அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் வனிதா விளையாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பின் நாமினேட் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளுடன் ஒருவர் வெளியேறுவார். அதன் படி தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி ஆகியோர் வாக்கு பட்டியலில் கடைசி இடங்களில் இருப்பதால் அதில் ஒருவர் கட்டாயம் வெளியேறுவார் என தெரிகிறது.