விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி டைட்டில் வின்னர் இவர் தானாம் – ரசிகர்கள் மகிழ்ச்சி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இறுதி சுற்றிற்கு ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் வின்னர்:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இறுதி வாரம் இன்னும் சில நாட்களில் முடிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என அறிவிக்கப்படும். டைட்டில் வின்னருக்கு ரூ. 50 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் பொங்கல் பண்டிகை என்பதால் இதுவரை எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அதனால் இறுதி சுற்றில் இருக்கும் போட்டியாளர்கள் சந்தோசமாக இருக்கின்றனர்.
இறுதி சுற்றில் ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவ்னி என ஐந்து பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரசிகர்கள் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி மக்கள் மனம் கவர்ந்த ராஜூ தான் முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் பிரியங்கா, மூன்றாவது இடத்தில் பாவ்னி, நான்காவது இடத்தில் நிரூப், ஐந்தாவது இடத்தில் அமீர் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இதில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதை பைனல்ஸ் அன்று பார்க்கலாம். இந்த செய்தி வெளியானதை அடுத்து ராஜு ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.