கண்ணாமூச்சி ஆடும் எழில், அண்ணன் மீது பயங்கர கோவத்தில் இருக்கும் கயல் – இன்றைய “கயல்” சீரியல் எபிசோட்!
சன் டிவி “கயல்” சீரியலில் கயலை எழில் காதலிக்க அவருக்கு லவ் லெட்டர் கொடுக்கிறார். ஆனால் அந்த லெட்டரால் தனது தங்கை திருமணம் நின்று விட்டது என நினைத்து வருத்தப்பட கயல் கண்ணில் சிக்காமல் எழிலிடம் மறைந்து கண்ணாம்பூச்சி ஆடுகிறார்.
கயல் சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலாக கயல் இருக்கிறது. இந்த சீரியலில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டு இருக்கிறது. கயலை எழில் காதலிப்பதால் தனது காதலை சொல்ல லெட்டர் ஒன்றை கொடுக்கிறார். அதனால் கயலின் தங்கை கல்யாணம் நின்று விடுகிறது. அதை சரி செய்து லெட்டர் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க கயல் போராடி வருகிறார். எழில் தான் கபிலனாக மாறி லவ் லெட்டர் கொடுத்தவன் என்பதை கயல் கண்டு பிடிப்பாளா என்பதே இன்றைய எபிசோடின் சுருக்கமாக இருக்கிறது.
அடுத்ததாக கயல் தனது தங்கைக்காக திருமண நிச்சய புடவை எடுக்க வந்திருக்கின்றனர். அதே கடைக்கு எழில் தனது நண்பனோடு வந்திருக்கிறான். அதை பார்த்த மாப்பிள்ளையின் அம்மா கபிலன் வந்துள்ளதாக கயலிடம் சொல்கிறார். அதனால் கபிலன் தான் எழில் என தெரியாமல் கயல் தேட தொடங்குகிறார். கயல் தேடுவதை தெரிந்து கொண்ட எழில் கண்ணில் படாமல் தப்பித்து கண்ணாமூச்சி ஆடுகிறார். மாப்பிள்ளை விக்னேஷ் தன்னிடம் இருந்த பணத்தை கயலின் அண்ணனிடம் கொடுத்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். விக்னேஷ் அம்மா பணம் கேட்டால் என்ன செய்வது என்று கயலிடம் சொல்கிறான். கயல் குடிகார அண்ணனை நினைத்து எரிமலையாகிறாள்.
விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி 2’ சீரியல் நாயகியாக நடிகை நதியா – வெளியான ஷாக் ப்ரோமோ!
இதை எல்லாம் எழில் ஒளிந்து நின்று கேட்க கயலுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என நினைக்கிறார். மாப்பிள்ளைக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு கோட் சூட் எடுத்து கொடுக்கிறார் பெரியப்பா. அவரை பார்த்து கயலுக்கு மேலும் கோவம் வருகிறது. பின் இருக்கும் பணத்தை வைத்து அவர் பில் கட்டி முடிக்கிறார். இந்த பதட்டத்தில் கபிலன் பற்றி அவர் நினைக்கவில்லை. கயலை பண கஷ்டத்தில் மாட்டி விட வேண்டும் என பெரியப்பா நினைத்தது தவறாகி விடுகிறது. அதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார் கயல். விக்னேஷ் கிட்ட அண்ணன் பணம் வாங்கியதை நினைத்து கோவமாக இருக்க குடித்துவிட்டு அண்ணன் வருகிறார். இதுநாள் வரை அண்ணி, குழந்தையின் முகத்திற்காக மட்டுமே அண்ணனை வீட்டிற்குள் விட்டு வைத்திருந்த கயல் இனி பொறுமையாக இருப்பாரா என்பதை அடுத்த எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.