விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களை விமர்சிக்கும் அபிஷேக் – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒன்பதாவது நாளான இன்று, அபிஷேக் ராஜா மற்ற போட்டியாளர்களை பற்றி விமர்சனம் செய்கிறார். இது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். முதல் வாரம் எலிமினேஷன் இல்லாமல் இருந்தாலும் திருநங்கை நமீதா மாரிமுத்து சில காரணங்களால் வீட்டை வீட்டு வெளியேறினார். அதன் பின் நேற்று வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. அதில் நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி முதல் வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின் அவர் சமையல் டீம், பாத்ரூம் டீம், கிளீனிங் டீம் என பிரித்து கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அபிஷேக் ராஜா மற்ற போட்டியாளர்கள் பற்றி விமர்சனம் செய்கிறார். முதலில் நாதியா பற்றி பேச அவர் இந்த வீட்டில் வனிதா போல இருப்பார். ஆனால் அவருடைய சுய ரூபம் இன்னும் வெளியே வராமல் இருக்கிறது என தெரிவிக்கிறார். அடுத்ததாக அவர் ஐக்கி பெரி பற்றி பேசுகிறார்.
அப்போது அவர் அவருடைய கேரக்டர் வித்தியாசமாக இருக்கிறது. அவருடன் யாரும் சென்று சேர முடியாது. வினோத பிறவி போல இருப்பார் என சொல்கிறார். பின் பாவனி பற்றி பேச அவர் சொன்ன கதை அனைவரையும் ஈர்த்து விட்டது. அதனால் தான் அவர்களை நாமினேஷன் செய்யவில்லை என அபிஷேக் சொல்கிறார். அதன் பின் இசை பற்றி சொல்ல அவளுக்குள் சோகம் இருக்கிறது. ஆனால் அடிக்கடி அதனை சொல்வது போல இருக்கிறது என கூறுகிறார். மேலும் அவரின் இந்த சரியான விமர்சனங்களை பார்த்து இமான் அண்ணாச்சி வாழ்த்து தெரிவிக்கிறார்.