Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டில் எட்டாவது வார தலைவர் போட்டி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் ஏழாவது வாரம் முடிவடைந்துள்ள நிலையில், எட்டாவது வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெறுகிறது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்கள் முடிவடைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று இசைவாணி வெளியேறினார். இந்நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். மேலும் கடந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மூன்றாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா உள்ளே அனுப்பப்பட்டார். இந்நிலையில் தற்போது எட்டாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ பரினா குழந்தையின் பெயர், கர்ப்பகால போட்டோஷூட் – கணவர் ரஹ்மான் ஓபன் டாக்!
அதன்படி, தலைவர் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் போட்டியாளருக்கு புதிதாக டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில், அபிநய், வருண், தாமரை, அண்ணாச்சி, அக்ஷரா மற்றும் ராஜு ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதில் போட்டியாளர்களுக்கு பஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. அதை மற்ற போட்டியாளர்களுடன் போட்டி போட்டு எடுக்க வேண்டும். யார் அதிகமான பஞ்சு எடுக்கிறார் என்பதை நிரூப் தேர்வு செய்ய வேண்டும்.
அதில் அக்ஷரா பெட்டியை மூடாமல் இருப்பதால் அதை ஒப்புக் கொள்ள முடியாது என நிரூப் சொல்கிறார். மேலும் தலைவராக தகுதி இல்லாதவர்களை தேர்வு செய்து நிரூப் போட்டியில் இருந்து விலக்க வேண்டும். அப்போது பிரியங்கா நீ தலைவரானால் என்ன பண்ணுவ என கேட்க, நீங்க எல்லாரும் சொல்லிவிட்டு தான் தலைவராக ஆனீர்களா என தாமரை கேட்கிறார். அவரது பதிலடியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின் நிரூப் தாமரையை விலகுங்கள் என பிரியங்கா சொல்ல, நிரூப் அவரை போட்டியில் இருந்து விலக்குகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.