![Vijay TV Bigg Boss 5 Promo | 3 லட்ச ரூபாய் பரிசுடன் வந்த சரத்குமார்! எடுக்கப்போவது யார்? ரசிகர்கள் உற்சாகம்! Vijay TV Bigg Boss 5 Promo | 3 லட்ச ரூபாய் பரிசுடன் வந்த சரத்குமார்! எடுக்கப்போவது யார்? ரசிகர்கள் உற்சாகம்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/01/Vijay-TV-Bigg-Boss-5-Promo-17.jpg)
Vijay TV Bigg Boss 5 Promo | 3 லட்ச ரூபாய் பரிசுடன் வந்த சரத்குமார்! எடுக்கப்போவது யார்? ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் அரங்கேற இருக்கிறது. ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்பது குறித்து ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 90 நாட்களை கடந்து இறுதி சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனுக்கான வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் இருக்கின்றனர். அதில் இருந்து 3 பேர் மட்டுமே இறுதி சுற்றில் இருப்பார்கள். அதில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார். இந்நிலையில் இந்த வாரம் போட்டி கடுமையாக இருக்கிறது.
“பாவம் கணேசன்” சீரியல் விலாஷினியின் மோசமான திருமண வாழ்க்கை – விவாகரத்து டூ வெற்றிக்கதை!
தற்போது வெளியான ப்ரோமோவில் நடிகர் சரத் குமார் பணத்துடன் வருகிறார். அவர் கொண்டு வந்த பெட்டியில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருக்கிறது. மேலும் ஒரு போட்டி என வந்தால் வெற்றி தோல்வி இருக்கும். ரூ.3 லட்சம் இவ்வளவு தான் இருக்கும் என நினைக்கலாம். ஆனால் இதற்கு மேலேயும் இருக்கலாம். நீங்க இதை எடுத்து கொண்டு வெளியே போகலாம் இல்லை என்றால் தொடர்ந்து விளையாடலாம். உங்களது விருப்பம் என சொல்கிறார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!
இதே போல கடந்த சீசனில் கவின் வெளியேறினார். இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என விளையாடி வருகின்றனர். அதனால் இந்த சீசனில் யாரு 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வார் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. அமீர் இறுதி சுற்றிற்கு நேரடியாக சென்றிருக்கிறார். அதனால் நிரூப் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.