Vijay Tv Bigg Boss 5 Promo | வீட்டின் தலைவர் பதவிக்கு புது டாஸ்க், மோதும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு வைக்கப்படும் டாஸ்குகள் அனைத்தும் மிகவும் அனல் பறக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சி குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 5:
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 80வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய எபிசோடில் இருந்து அபிநய் வெளியேறியுள்ளார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இவர்களை கமல் டாப் 10 போட்டியாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று வருண் மற்றும் அபிநய் இருவர் தான் இறுதி வரை காப்பாற்றப்படாமல் இருந்து வந்தனர். இதனால் யார் வெளியேறுவார்கள் என்று ஒரு வித படபடப்பு நிலவி வந்தது. ஆனால் அபிநய் வெளியேறியது சிலரை மிகவும் பாதித்தது. கண்ணீருடன் தனது நண்பர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார் அபிநய்.
தற்போது மீதம் 4 வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பாக்கி உள்ளது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு வித அனல் மூண்டுள்ளது. தங்களை காப்பாற்றிக் கொள்ள அடுத்தவரை தள்ளிவிடவும் தயாராக உள்ளனர். மேலும் தற்போது கொடுக்கப்படும் போட்டிகளும் அதிக சவால் நிறைந்ததாக உள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த வார தலைவரை தேர்வு செய்யும் டாஸ்கை ராஜு வாசிக்கிறார். டாஸ்கின் பெயர் ‘உட்றாதீங்க எப்போவ்’. இதில், போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டிருக்கும் கயிறை பிடித்துக் கொள்ள வேண்டும்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? புதிய கெட் அப்! ரசிகர்கள் ஷாக்!
இறுதி வரை கயிறை யார் விடவில்லையோ அவரே இந்த வாரத்தின் தலைவர் என்று கூறப்படுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் கயிறை பிடித்துக் கொண்டே உள்ளனர். சாப்பிடும் போதும் கயிறை பிடித்துக் கொண்டும் எங்கே சென்றாலும் அனைவரும் ஒன்றாக கயிறை பிடித்த படி செல்வதுமான காட்சிகள் வருகிறது. இதில் கயிற்றில் இருந்து ஒருவரை ஒருவர் கையை எடுக்க வைக்க, இழுத்து சண்டையிட்டு கொள்கின்றனர். முடிவில் நிரூப் பிரியங்காவை பார்த்து ஏதோ கூற அதற்கு பிரியங்காவும் பயங்கரமாக கத்துகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் பார்க்கின்றனர். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது தெளிவாகிறது.