‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

கடந்த வார ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஸ்ருதி வெளியேற்றப்பட்ட பிற்பாடு தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை வலைதளங்களில் பதிவிட அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் ஸ்ருதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் தாரக மந்திரம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி தான் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் எபிசோடுகளும் பயணித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் துவங்கப்பட்ட ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 37 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

‘கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா’ பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை – டாப் கமெண்ட்ஸ்!

அந்த வகையில் முதலாவது வாரத்தில் போட்டியாளர் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிய நிலையில் இவரை தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது 4வது வார எலிமினேஷனாக எதிர்பாராத விதமாக போட்டியாளர் ஸ்ருதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்ருதி தனது முதல் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – 43வது வார TRP பட்டியல்!

அதில், ‘நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து 37 நாட்களில் வெளியேறி இருந்தாலும் 100 நாட்களுக்கு இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறியது எனக்கு வருத்தமளிக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் மூலம் உங்களை மகிழ்விக்க முடியாதது தான் வருத்தமளிக்கிறது. இப்போது என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய பயணத்தை துவங்க இருக்கிறேன். இனி மேலும் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!