பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை கண்டுபிடித்த எழில், கோபியை பார்த்து ஷாக் ஆகும் மயூரி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று எழில் பாக்கியாவை பின்தொடர்ந்து செல்கிறார். பாக்கியா வண்டி ஓட்டுவதையும் கண்டுபிடித்து விட்டு, அவரை பாராட்டுகிறார். பின், மயூரியை ராஜேஷ் சந்திக்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவை எழில் பின்தொடர்ந்து செல்கிறார். அப்போது பாக்கியா தான் வண்டியை ஓட்டுகிறார் என்பதனையும் கண்டுபிடித்து விடுகிறார். முதலில், எழிலை பார்த்து பயப்படும் பாக்கியா பின், அவரிடம் உண்மையினை கூறுகிறார். இதனை கேட்டு எழில் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். அதே போல் பாக்கியாவை நன்றாக வண்டி ஓட்டும்படி அறிவுறுத்துகிறார். இதனை வீட்டினரிடம் கூற வேண்டும் என்று கூறுகிறார். இதனால் பாக்கியா பயந்து விடுகிறார். ஆனால், எழில் அவரை தைரியம் சொல்லி வீட்டினரிடம் பேசலாம் என்று கூறுகிறார். பின், ஒருவாறாக சமாதானம் அடைந்து பாக்கியா எழிலுடன் வீட்டிற்கு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் கொண்டாட்டம்!
வீட்டில் எழில் வந்து அனைவரிடமும் உண்மையினை கூறுகிறார். இதனால் முதலில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின், பாக்கியாவின் மாமனார், ஜெனி என்று அனைவரும் பாக்கியாவை உற்சாகப்படுத்துகின்றனர். பாக்கியாவின் மாமியார் அன்று தன்னை இடித்தது பாக்கியா தான் என்று கண்டுபிடித்து விடுகிறார். பாக்கியாவும் உண்மையினை ஒத்துக்கொள்கிறார். அனைவரும் இதனை கேட்டு சிரித்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பின், மயூரி தனது பள்ளியில் இருந்து வரும் போது, அவரிடம் ராஜேஷ் வந்து பேசுகிறார். இதனால் பயந்து விடும் மயூரி அவரிடம் இருந்து ஒட பார்க்கிறார். அப்போது ராஜேஷ் தனக்கு மயூரியை மிகவும் பிடிக்கும் என்றும், தன்னால் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை என்று கூறுகிறார். இவை அனைத்தையும் கேட்கும் மயூரி ஓடி விடுகிறார். பின், கோபி ராதிகா வீட்டிற்கு வருகிறார். பள்ளி முடிந்து வீடு வரும் மயூரி கோபியை பார்த்து விட்டு வீட்டின் வாசலிலேயே நின்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!