‘ராஜா ராணி’ சீரியல் நடிகையை காதலிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ அருண்? வைரலாகும் புகைப்படம்!
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் அருணும், ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்த வதந்தியை உண்மையாக்கும்படியான புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலமாகவே நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கூடிய விரைவிலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிடுகின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் அருண். அதாவது, இவர் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கண்ணம்மாவை கருப்பாக இருக்கிறார் என்பதற்காக அனைவருமே வெறுத்து ஒதுக்கிய போது பாரதி மட்டும் தான் கண்ணம்மாவை தீவிரமாக காதலித்தார்.
Exams Daily Mobile App Download
அப்போது பாரதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அருணுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பெருகினர். மேலும், சமூக வலைப் பக்கங்களில் கூட அருணுக்கென்றே தனியான நிறைய ரசிகர்கள் பக்கங்கள் கூட இருக்கிறது. இதனிடையே பாரதி கண்ணம்மா அருணும், ராஜா ராணி வில்லி அர்ச்சனாவும் காதலிப்பதாக சமூக வலை பக்கங்களில் அவ்வப்போது தகவல் பரவி வந்தது. இருவரின் தரப்பில் இருந்தும் இதுவரைக்கும் இந்த தகவல் குறித்தான எந்த அறிவிப்பும் வரவில்லை. இதுமட்டுமல்லாமல், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் கூட சமூக வலைப் பக்கங்களில் வெளியானதில்லை.
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? கொரோனா பாதிப்பு எதிரொலி!
இதனால், கண்டிப்பாக இது வதந்தியாக தான் இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா அருண், ராஜா ராணி அர்ச்சனா மற்றும் பாக்கியலட்சுமி ரித்திகா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படம் சமூக வலைப் பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலமாக அருணும், அர்ச்சனாவும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைப் பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.