மரணத்தை தழுவிய ராமமூர்த்தி.. உச்சகட்ட சோகத்தில் பாக்கியலட்சுமி குடும்பம் – எதிர்பாராத ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி திருமணத்தை நிறுத்த ராமமூர்த்தி எவ்வளவோ முயற்சி செய்ய, ஆனால் கோபி அவரை அப்பா என பார்க்காமல் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். அதனால் மன உளைச்சலில் இருக்கும் ராமமூர்த்தி இறந்துவிட, அவர் இழப்பை தாங்க முடியாமல் பாக்கியாவும், ஈஸ்வரியும் கதறி அழுகின்றனர்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவின் திருமணம் மணமேடை வரை வந்திருக்கிறது. கோபியின் கல்யாணத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பாக்கியா சமையல் ஆர்டர் வாங்கி இருக்கிறார். தன்னுடைய கணவரின் கல்யாணத்தில் சமைக்க போகிறோம் என்ற வருத்தம் ஒரு பக்கம், தன்னை நம்பி இவ்வளவு பெரிய ஆர்டர் கொடுத்த ராஜசேகரன் சாரின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோள் ஒரு பக்கம் இருக்க, பாக்கியா இரண்டாவது வழியை தேர்வு செய்கிறார்.
யார் யாரை திருமணம் செய்தாலும் பரவாயில்லை என நினைத்து தன்னுடைய வேலையை கவனிக்கிறார். இதற்கிடையே ராமமூர்த்தி கோபி திருமணத்தை நிறுத்த திருமண மண்டபத்தை தேடி கண்டுபிடித்து வருகிறார். அங்கே கோபி உடல்நிலை சரியில்லாத அப்பா என பார்க்காமல் பயங்கரமாக பேசுகிறார். மேலும் ராமமூர்த்தியை கீழே தள்ளி வெளியே போக சொல்ல, பாக்கியா அவரை தாங்கி பிடிக்கிறார். இதனால் ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் வீட்டிற்கு வருகிறார்.
தொடங்கிய சில நாட்களில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
வீட்டில் ராமமூர்த்தி பதட்டமாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது அவர் நடந்ததை சொல்லிவிட்டு படுக்க செல்ல, திடீரென நெஞ்சுவலி வந்து அவர் மரணமடைகிறார். அவருடைய இறப்பை பாக்கியாவும், ஈஸ்வரியும் ஏற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவருடைய மரண செய்தியால் கோபி ராதிகா திருமணம் நிற்குமா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்