IPL 2022 திருவிழா: MS தோனி ஒரு சிறந்த ஃபினிஷர்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!
சமீப காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் சரியான ஃபார்மில் இல்லாததால் அவர் பேட்டிங் வரிசையில் அதிகமாக பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரீதிந்தர் சோதி கருத்து தெரிவித்துள்ளார்.
MS தோனி
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி MS கேப்டன் தோனியின் தலைமையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 15வது சீசனில் விளையாட இருக்கிறது. இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, MS தோனி உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும் CSK அணியில் கடந்த சீசனில் இருந்த ஆழம் இல்லாதது போல் தெரிகிறது. அதே நேரத்தில் தீபக் சஹாரின் விலகளும் அணிக்கு பெரிய பேரிடராக அமைந்துள்ளது. இப்போது MS தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகள் – காரணம் என்ன தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்த பிறகு கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். இப்போது தோனி டி20 லீக்கில் செயல்படுவதை பொருத்தவரை போட்டிப் பயிற்சி இல்லாதது ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதாக பலர் கருதுகின்றனர். கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில், சிஎஸ்கே பேட்டிங் யூனிட் அவ்வப்போது சறுக்கல்களை சந்தித்து இருந்ததால் தோனி வரிசையை பேட் செய்ய வேண்டும் என்று ரீதிந்தர் சோதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, ‘எம்.எஸ். தோனி சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்த அதே ஃபினிஷர் அல்ல.
ஏனெனில் அவர் ஆர்டரை பேட் செய்ய வேண்டும். அவர் தனது நேரத்தை எடுத்துக் கொண்டு 10 அல்லது 11வது ஓவரில் வந்தால் அவரால் நன்கு செயல்பட முடியும். சிஎஸ்கேயின் வெற்றி வாய்ப்புகளுக்கு அவரும் முக்கியம் என்பதை எம்எஸ் தோனி அறிவார்’ என்று கூறி இருக்கிறார். இந்த கருத்துக்களை கவனித்து பார்க்கையில், தோனி கடந்த இரண்டு சீசன்களில் விரும்பியபடி பேட்டிங்கில் திறம்பட செயல்படவில்லை. ஐபிஎல் 2020 சீசனில், அவர் 25 சராசரியில் மொத்தம் 200 ரன்கள் எடுத்தார். அதே போல 2021 இல் அவரது செயல்திறன் மேலும் குறைந்து, 16.28 சராசரியில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருவதை மறுப்பதற்கில்லை என்றாலும், அனுபவமிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தோனி பேட்டிங் வரிசையில் அதிகமாக விளையாடினால், ஃபார்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பிக்க முடியும் என்று ரீதிந்தர் கருதுகிறார். இதற்கிடையில் ஜடேஜா ஒரு பேட்டராக வியத்தகு முன்னேற்றங்களை காட்டுவதால், இந்த சீசனில் ஒரு சிறந்த நட்சத்திர வீரராக அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ரீதிந்தர் சோதி கூறுகையில், ‘ரவீந்திர ஜடேஜாவின் ஃபார்ம் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். மொஹாலி டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதம், பந்துவீசிய விதம் ஆகியவற்றின் ஃபார்மை எடுத்துக்கொண்டால் சென்னையை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கான சிறந்த அறிகுறிகளாக இது தென்படுகிறது. ரவீந்திர ஜடேஜா, தோனி போன்ற பெரிய வீரர்கள் அனைவரும் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.