விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடுவர் பென்னி தயால் – இதுதான் காரணம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் பாடகர் பென்னி தயால். தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சில பிரச்சனையால் விலகி உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சூப்பர் சிங்கர் 8:
விஜய் டிவி சார்பில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்கள் அதிகம் பேர். சீனியர், ஜூனியர் என நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி தற்போது பல எபிசோடுகள் தாண்டி 8வது சீசனில் உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் அனு, உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், சுவேதா ஆகியோர் உள்ளனர்.
கோவிலில் பொங்கல் வைக்கும் சந்தியா, உண்மையை சொல்வாரா சரவணன்? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி திறமை உள்ளவர்களுக்கு அரிய வாய்ப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர். எடுத்துக்காட்டாக செந்தில், ராஜ லட்சுமி தம்பதியை எடுத்துக் கொள்ளலாம். இதில் டைட்டில் ஜெயிக்காத பலருக்கும் கூட சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிகழ்ச்சியில் ஒரு ஜாலியான நடுவராக இருந்து வந்தவர் பென்னி. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இனி தான் சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவு போட போவதில்லை என்றும் அதில் இருந்து வெளியேறுகிறேன். எல்லா மோசமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது, நான் சாதாரண மனிதன், எல்லாவற்றிற்கும் நன்றி என பதிவு செய்துள்ளார். ஆனால் அது குறித்து அவர் எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில் ரசிகர்கள் என்ன நடந்தது? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ரசிகர்கள் கடுமையாக நடுவர்களை விமர்சித்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.