கோவிலில் பொங்கல் வைக்கும் சந்தியா, உண்மையை சொல்வாரா சரவணன்? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கின்றனர். பின்னர் சரவணனின் பிரச்சனை பற்றி சந்தியா கேட்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவும், சரவணனும் கோவிலுக்கு வந்து ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைக்கின்றனர். பின்னர் அர்ச்சனாவின் அம்மாவும் தங்கையும் வீட்டிற்கு வருகின்றனர். அர்ச்சனாவின் தங்கை கல்யாணம் பற்றி சிவகாமி கேட்கின்றனர். நல்ல வரன் வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.
நாங்களும் பார்வதிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று சிவகாமி சொல்கிறார். அர்ச்சனா உடனே ஆமாம் பாட்டி ஊரில் இருந்து மாப்பிளை பார்த்திருக்கிறார். பார்வதி கல்யாணம் செய்துக் கொண்டு கிராமத்திற்கு போய்டுவாள், என் தங்கச்சி பேங்க் மேனேஜரை கல்யாணம் செய்து டவுனில் இருப்பார் என்று சொல்கிறார். அப்போது பார்வதிக்கு ஒரு மாதிரி இருக்கிறது.
அப்போது பாஸ்கர் போன் செய்ய, பார்வதியை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா என்று கேட்கிறார். பார்வதி பதில் பேசாமல் இருக்கிறார். பார்வதி பற்றி அர்ச்சனா சொன்னதை நான் நம்பவில்லை என்று சொல்கிறார். பார்வதி அமைதியாக இருப்பதை சம்மதமாக எடுத்துக் கொள்ளவா என்று கேட்க அப்போதும் பார்வதி அமைதியாக இருக்கிறார். உடனே பாஸ்கர் சந்தோஷத்தில் இருக்கிறார்.
சந்தியாவும் சரவணனும் பொங்கல் வைத்துவிட்டு சாமி கும்பிட போகின்றனர்.சாமி கும்பிட்டு முடித்த பின்னர் இருவரும் பின்னாடி இருக்கும் ராமர் கோவிலில் அமர்ந்து விட்டு செல்ல பூசாரி சொல்கிறார். சந்தியாவும் சரவணனும் தனியாக இருக்கும் போது சரவணனின் பிரச்சனை குறித்து சந்தியா கேட்கிறார். சரவணன் அப்போதும் பேசாமல் இருக்க மழை பெய்கிறது.
மழையில் நனைய வேண்டாம் என சரவணன் வெளியே செல்ல சந்தியா சோகத்துடன் பின்னாடியே வருகிறார். சந்தியா தடுக்கி விழுக செல்ல சரவணன் அவரை பிடிக்கிறார். நெருக்கமாக இருக்க சரவணன் சந்தியாவை விலகி செல்கிறார். அப்போது சந்தியா விளக்கம் கேட்க யாருக்காகவும் என்னை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படி இருங்க என்று சொல்லி சரவணன் அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாக்கியலட்சுமி” சீரியல் லேட்டஸ்ட் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!