‘சின்னத்திரை’ முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகர் ராஜு ஜெயமோகன் கடந்து வந்த வாழ்க்கை!
சினிமா பின்னணி இல்லாத சதாரண குடும்பத்தில் பிறந்து, வாய்ப்புகளை தேடி அலைந்து தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ள நடிகர் ராஜு ஜெயமோகன் கடந்து வந்த வாழ்க்கை குறித்து இப்பதிவில் காணலாம்.
நடிகர் ராஜு ஜெயமோகன்
ஒரு கலைஞனை வாழ வைப்பது ரசிகர்கள் தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. சினிமாவில் தோன்றும் யாராக இருந்தாலும், எந்த பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் திறமையுடன் சேர்த்து அவர்களை ரசிக்கும் ரசிகர்கள் இல்லையென்றால் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாது. சினிமா உலகை பொறுத்தவரை பலர் புகழுக்கும், பணத்துக்கும், பெயருக்கும் உழைத்து வருகின்றனர். ஆனால் சிலரோ சினிமா மீதுள்ள காதலால் எத்தனை ஏமாற்றங்களை சந்தித்து வந்தாலும் தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருந்து ஒரு நாள் வெற்றிக்கனியை எட்டி பிடிப்பார்கள்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்? சீரடி கோவிலில் தரிசனம்!
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் நடிகர் ராஜு ஜெயமோகன். தற்போது விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்று வரும் நடிகர் ராஜு ஜெயமோகன் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜூ சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்து சென்னைக்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல மாதங்கள் காத்துக்கிடந்த இவருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
கதை எழுதி காலத்தை கழித்து வந்த ராஜுவை ஒரு நடிகராக மாற்றியது விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் தான். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடிகர் கவினுக்கு நண்பராக நடித்திருந்தார் ராஜு. இதனுடன் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கும் ஸ்கிரிப்ட் எழுதி வந்திருக்கிறார். பிறகு வெள்ளித்திரையில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ராஜூ ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் நடிகர் கவினின் நண்பராக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
இதை தொடர்ந்து மீண்டுமாக சின்னத்திரைக்கு திரும்பியுள்ள நடிகர் ராஜு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடிகர் செந்திலுக்கு நண்பராக கத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் பேசும் டைமிங் காமெடி வசனங்கள் இவருக்கு பெரிய அளவில் ரீச்சை கொடுத்துள்ளது. இது தவிர விஜய் டிவியின் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் தன்னுடைய புதிய திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார் ராஜு. இதை தொடர்ந்து தற்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் ராஜு மக்களின் மனங்களை வெல்லுவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.