நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்? சீரடி கோவிலில் தரிசனம்!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன்:
தமிழ் திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தேர்ந்து எடுத்து தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டுள்ளார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
மேலும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் ‘போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’ போன்ற திரைப்படங்கள் இயக்கி பிரபலமானவர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள அன்னத்தை திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபியிடம் வாக்குவாதம் செய்யும் அபிஷேக் ராஜா – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” 3வது ப்ரோமோ!
அதனை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ போன்ற படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். அதன்பின் மும்பையில் உள்ள சித்தி விநாயகர், மகாலட்சுமி கோவில், மும்பை தேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.