விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ராஜு அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்து ரூ.28 லட்சத்துடன் வெளியேறினார்.

பிக் பாஸ்:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் 100 நாட்களை கடந்து ஒளிபரப்பானது. இந்த சீசனில் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, சின்னத்திரை நடிகர் ராஜூ, மாடல் மதுமிதா, ஐக்கி, நகைச்சுவை நடிகர் அண்ணாச்சி, சின்னத்தம்பி சீரியல் நாயகி பாவ்னி , நிருப் மற்றும் இந்த சீசனில் முதல் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் நமீதா என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அதிகம். இந்நிகழ்ச்சியில் வழக்கமாக வாரந்தோறும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் வாரந்தோறும் ஒருவர் வெளியேறினர். இந்த சீசனில் பங்கேற்ற ஓவ்வொரு போட்டியாளரும் தனது திறமையால் தனித்து விளையாட தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர். இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், ஆமீர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். சீசன் 5வில் பங்கேற்ற சிபி, ரூ.12 லட்சத்துடன் வெளியேறி சென்றார். அடுத்ததாக அமீரும், நிரூப்பும் எலுமினேஷன் செய்யப்பட்டனர். 105 நாட்களை கடந்த சீசன் 5வின் கிராண்ட் ஃபினாலே நேற்று ஒளிபரப்பட்டது. ராஜு, பிரியங்கா, பாவனி ஆகியோர் இறுதி போட்டியாளராக வீட்டிற்குள் இருந்தனர்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கிராமத்தில் பொங்கல் கொண்டாடும் குடும்பத்தினர்!

இந்த நிலையில் 105 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5வின் கிராண்ட் ஃபினாலே நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற ராஜு பிக்பாஸ் டைட்டிலை வின் செய்து ரூ.50 லட்சத்தை தட்டி சென்றார். பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்து ரூ.28 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதே போல் பாவ்னி ரூ. 20 லட்சமும், அமீர் ரூ. 5 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் ஐந்தாம் இடத்தை பிடித்த நிரூப் ரூ. 11 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!