கண்ணம்மா பற்றி தவறாக சொல்லாத பாரதி, மகனை நினைத்து வருத்தப்படும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா பற்றி தவறாக சொல்லாத பாரதி, மகனை நினைத்து வருத்தப்படும் சௌந்தர்யா - இன்றைய
கண்ணம்மா பற்றி தவறாக சொல்லாத பாரதி, மகனை நினைத்து வருத்தப்படும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா பற்றி தவறாக சொல்லாத பாரதி, மகனை நினைத்து வருத்தப்படும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி என்ன சொல்வார் என்ற கவலையில் இருக்கிறார். பின் விவாகரத்து வாங்கிய பெற்றோரின் குழந்தை ஒன்றை பார்த்து அவர் வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி நீதிபதியிடம் என்ன சொல்வார் என தெரியாமல் கண்ணம்மா வருத்தத்தில் இருக்கிறார். அப்போது அஞ்சலியின் அப்பா வர, உன் சித்தி வந்தாளா என கேட்கிறார். ஆமாம் என கண்ணம்மா சொல்ல செருப்பை கழட்டி அடிக்க வேண்டியது தானா என கேட்க, அவங்க பேசியது கூட பிரச்சனை இல்லை ஆனால் அவங்களை பணம் தரேன் என சொல்லி அனுப்பிய பாரதி நிலைமையை யோசித்து பாருங்க என சொல்கிறார். பின் பாரதி யோசித்துக் கொண்டிருக்க அங்கே விவாகரத்து வாங்கிய நடிகை ஒருவர் வருகிறார்.

அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க, அவரது கணவர் வந்து கோவமாக பேசுகிறார். பின் அவர்களது குழந்தை அழுது கொண்டிருக்க பாரதி என்ன நடந்தது என கேட்கிறார். என் அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க ஆனால் இப்படி சின்ன சண்டை வந்து பிரிந்துவிடுகிறார்கள் என நினைத்து அழ, பாரதி லட்சுமி பேசியதை நினைத்து பார்க்கிறார். பின் நீதிமன்றம் கூட நீதிபதி பாரதியிடம் எதோ ஆதாரம் இருப்பதாக சொன்னீங்க என்னது என கேட்கிறார். அதற்கு பாரதி கண்ணம்மா பற்றி சொல்லாமல் என் குழந்தையை பிரித்துவிடுவாள் என மீண்டும் சொல்கிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செழியனுடன் மீண்டும் இணைந்த ஜெனி – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

நீதிபதி கண்ணம்மாவிடம் கேட்க, கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். சேர்ந்து வாழ வேண்டுமா என நீதிபதி கேட்க, முடியாது என கண்ணம்மா சொல்கிறார். விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழ மாட்டேன் என சொன்னால் எப்படி என நீதிபதி கேட்கிறார். அதற்கு கண்ணம்மா நான் ஒரு சாதாரண பெண் எனக்கு திருமணம் எல்லாம் நடக்கும் என தெரியாமல் இருந்தது. ஆனால் எனக்கு திருமணம் முடிந்து நான் எல்லாம் சந்தோசமாக இருந்தேன் இவரிடம் ஒன்னு தான் கேட்க வேண்டும்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புதிய கண்ணம்மா வினுஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் ஷாக்!

அதாவது இத்தனை வருடம் இல்லாமல் இப்போது ஏன் விவாகரத்து தர வேண்டும் என கேட்கிறார். இந்த 8 வருடத்தில் நான் எந்த உதவியும் கேட்கவில்லை. சொந்தமாக உழைத்து என் குழந்தையை வளர்த்து வருகிறேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா பேச என் மருமகள் போல ஒரு பெண் இருக்கமாட்டாள் அவள் மிகவும் நல்லவள் தன்னுடைய பாசத்தில் அனைவரையும் கட்டிபோட்டுவிடுவாள் என சொல்ல, நீதிபதி உங்களது மருமகள் பற்றி இவ்வளவு சந்தோசமாக பேசுறீங்க உங்களது மகனிடம் சொல்லலாம் என கேட்க, பெத்த மகன் என் வாழ்க்கையில் தலையிடாதே என சொன்னால் எப்படி இருக்கும் என கேட்கிறார். அப்போது என்றாவது ஒருநாள் இருவரும் சேருவாங்க என நினைத்தேன் என்று சொல்லி சௌந்தர்யா அழுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!