பாரதி, கண்ணம்மாவை மீண்டும் சந்தித்த நீதிபதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை சந்திப்பது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில முக்கியமான திருப்பங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த கதையில் கண்ணம்மா மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவரை வெறுத்து ஒதுக்கி வரும் பாரதி, 8 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் பாரதி, கண்ணம்மா இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்த ‘கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல்’ – ப்ரோமோ ரிலீஸ்!
இப்போது கண்ணம்மா வீட்டில் அவருடன் வசித்து வரும் பாரதி, அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினாலும் அவ்வப்போது சில மலரும் நினைவுகள் பாரதிக்கு வந்து போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாரதியின் மனதை மாறுவதற்காக, வடிவுக்கரசி என்ற புதிய கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கதாப்பாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்து வர ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம் கலகலப்பாக நகர்ந்து வருகிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி!
இதற்கிடையில் பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவரையும் சந்திப்பது போல சில காட்சிகள் அடுத்தகட்ட கதைக்களத்தில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் பாரதி, கண்ணம்மாவை துணிக் கடைக்கு அழைத்து செல்லும் சௌந்தர்யா அங்கு வைத்து நீதிபதியை சந்திக்கிறார். இது தொடர்பான படப்பிடிப்பு புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.