பாரதியை குழப்பிய சாமியார், உண்மையை உணருவாரா? ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா சீரியல் பார்க்க தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது சாமியார் வந்து பாரதிக்கு அறிவுரை சொல்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ:
விஜய் டிவியில் நம்பர் 1 சீரியல் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா 8 வருசமாக சண்டை போட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில் தற்போது நீதிமன்றம் உத்தரவால் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். ஆனால் பாரதி பிடிக்காமல் தான் கண்ணம்மா உடன் இருக்கிறார். கண்ணம்மா பாரதிக்கு பிடித்தது எல்லாம் செய்து கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டாலும் பாரதி மனம் இறங்கி வரும் நேரத்தில் மனசாட்சி வந்து தடுக்கிறது.
3வது குழந்தைக்கு அம்மாவாகும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவிற்கு புடவை வாங்கி கொடுக்க கண்ணம்மா அதை பார்த்து சந்தோசப்படுகிறார். ஆனால் பாரதி சௌந்தர்யா செய்ததை நினைத்து கோவமாக இருக்க வெண்பா வந்து பாரதியை மேலும் கோவப்படுத்துகிறார். அதனால் பாரதி வெண்பாவை அடித்து துரத்துகிறார். ஆனால் அதை வைத்தும் வெண்பா புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார். பூஜையில் பாரதி கலந்து கொள்வாரா அதில் வெண்பா என்ன குளறுபடி செய்ய இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
தமிழ் திரைப்பட நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இப்படி இருக்க பாரதியை ரோட்டில் ஒரு சாமியார் சந்திக்கிறார். அவர் பாரதியிடம் எனக்கு பசிக்கிறது என சொல்ல பாரதி அவருக்கு காசு கொடுக்கிறார். அதை வாங்கி கொண்டு அவர் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என தோன்றுகிறது என சொல்கிறார். பாரதி என்ன என கேட்க நீ நல்லவங்க என நினைப்பவர் நல்லவர் இல்லை கெட்டவர் என நினைப்பவர் கெட்டவர் இல்லை என சொல்கிறார். மேலும் கண்ணால் பார்ப்பதே நிஜம் என அவர் அறிவுரை சொல்ல பாரதி குழப்பத்தில் இருக்கிறார்.