கஷ்டப்படும் கண்ணம்மா, வருத்தப்படும் பாரதி, தடுக்கும் மனசாட்சி Repeatu – கதறும் ரசிகர்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது புதிய கண்ணம்மா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்சீரியலில் பழைய ஈர்ப்பு இல்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலல் டாப் வரிசையில் இருந்த நிலையில் கதையின் ஆணி வேராக இருந்த வில்லி வெண்பா பிரசவத்திற்காக சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். அந்த நேரம் பார்த்து சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகினார். அதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!
அதன் பின் வினுஷா தேவி கண்ணம்மாவாக நடிக்க தொடங்கினார். அவரை முதலில் கண்ணம்மாவாக ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் பின் அவருடைய நடிப்பு திறமையாலும் சீரியலில் பல நகைச்சுவை அதிகரித்ததும் கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் பாரதியும் கண்ணம்மாவும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வில்லி இல்லாத காரணத்தால் சீரியலில் விறுவிறுப்பு குறைந்துள்ளது. பழைய நினைவுகளுடன் பாரதி கண்ணம்மா சேர்ந்து இருப்பதும், கண்ணம்மாபடுகிற கஷ்டத்தை பாரதி பார்ப்பதும், அதனால் மனம் இறங்குவதும், உதவி செய்ய போகும் நேரம் பார்த்து மனசாட்சி தடுப்பது போல கடந்த இரண்டு வாரங்களாக காட்டப்பட்டுள்ளது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஆர்யன் உடனான பிரிவு? செம்பருத்தி ஷபானா கொடுத்த விளக்கம்!
இதனால் ரசிகர்கள் அரைத்த மாவையே அரைப்பதால் கடுப்பில் இருக்கின்றனர். இது குறித்து வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிடம் சென்று சீக்கிரம் சீரியலுக்கு வாங்க என கதறி வருகின்றனர். மேலும் பரீனா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியதால் அடுத்த வாரம் முதல் சீரியல் சூடுபிடிக்கும் என காத்திருக்கின்றனர்.