விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஆர்யன் உடனான பிரிவு? செம்பருத்தி ஷபானா கொடுத்த விளக்கம்!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கிய ஷபானா, தனது திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ஷபானா:
தமிழ் சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்தவர் ஷபானா ஆர்யன் தம்பதி. ஷபானா ஜீ தமிழ் சீரியலில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் சீரியல் நண்பர்கள் உதவி உடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கேரளா முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் தேனிலவு சென்ற இடத்தில் ஒரே நாளில் திரும்பி வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை பிரிய போகிறார்கள் என பல வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆனால் ஷபானா ஆர்யன் தரப்பில் இது குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
ஆர்யன் வீட்டில் ஷபானா பிரிந்து போக வேண்டும் என மிரட்டுவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஷபானா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது. அவர் மாலில் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து அதில் ஆர்யன் அவர்களை டேக் செய்து இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இத்தனை சர்ச்சைகள் இருப்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல பதிவு வெளியிட வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.