‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி? ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது நடிகை ரோஷினிக்கு பதிலாக நடிகை வினுஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான், ‘பாரதி கண்ணம்மா’ இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி உள்ளது. இந்த நிலையில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!
நடிகை ரோஷினிக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அதனால் தான் அவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பதால் தனது திரைப்பயணத்தில் நெருக்கடி ஏற்பட்டு விடுமோ? என்பதால் தான் ரோஷினி விலக இருக்கிறார் என்ற செய்திகளை அவருக்கு நெருங்கியவர்கள் கூறி வருகின்றனர். இப்படியாக இருக்க, அடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஓங்கி உள்ளது.
கதிரின் பேச்சை கேட்காத முல்லை, பயத்தில் கண்ணன் & ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ட்விஸ்ட்!
அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. வினுஷா பல நடிகைகளை போல டிக் டாக் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் ஒரு ஜாடையில் நடிகை ரோஷினி போலவே இருப்பதால் அவர் இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது கேள்வியே.