தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் சமூக நலனுக்காக சிறப்பாக பங்காற்றிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. எனவே தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பெண்களுக்கான விருது:

தமிழகத்தில் சமூக முன்னேற்றத்திற்காக பலர் சிறப்பாக பங்காற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக தொண்டாற்றியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி!

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 24ம் தேதி பாராட்டு பாத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

சென்னை: கடும் வீழ்ச்சியில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

இதற்கான தகுதியுடையவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுடையவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட திட்டஅலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம்), காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலமாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடம், நாகர்கோவில் என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!