வெண்பாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சௌந்தர்யா, வெண்பாவை கொலை செய்வது போல சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் மேக்கிங் வீடியோ ஒன்று பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
பாரதி கண்ணம்மா
தற்போது தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதை சுமூகமாக போகிறது என எண்ணிக்கொண்டிருக்கும் சூழலில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத பல முக்கிய கதை திருப்பங்கள் கடந்த வார எபிசோடுகளில் ஒளிபரப்பப்பட்டது. அதிலும் ஹேமா தான் கண்ணம்மாவின் குழந்தை என்கிற உண்மையை சௌந்தர்யா கூறுவது போல வெளியான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது.
ஹேமாவை பார்த்து கதறி அழும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களமாக வெண்பாவை, சௌந்தர்யா கொலை செய்வது போல இருக்கும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வெண்பாவின் வீட்டுக்கு வரும் சௌந்தர்யா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை துப்பாக்கியால் சுடுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ காட்சிகளை கண்ட ரசிகர்கள் எதற்காக சௌந்தர்யா, வெண்பாவை கொலை செய்ய போகிறார், ஒருவேளை வெண்பா செய்த சூழ்ச்சிகள் எல்லாம் சௌந்தர்யாவுக்கு தெரிந்திருக்குமோ என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தவிர இந்த காட்சிகள் வெண்பாவின் கனவு என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். என்னவாக இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் அடுத்த கட்ட ஆச்சரியத்துக்கு தயாராக வேண்டியது தான்.