ஹேமாவை பார்த்து கதறி அழும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
இந்த வாரத்துக்கான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், ஹேமா தான் தனது 2வது குழந்தை என்கிற உண்மை தெரிந்ததும் கண்ணம்மா, பாரதியின் வீட்டுக்கு ஓடி சென்று ஹேமாவிடம் அந்த உண்மையை சொல்ல வருவது போல வெளியான ப்ரோமோ ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா சந்தித்து வந்த போராட்டங்களுக்கு எல்லாம் தற்போது தான் தீர்வு கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஒவ்வொரு எபிசோடுகளிலும் சில முக்கியமான காட்சிகள் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை மறைக்கப்பட்ட அனைத்து உண்மைகளும் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கியமானதாக கருதும், ஹேமா பற்றிய உண்மையும் கடந்த வார எபிசோடுகளில் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
இதை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த வாரத்துக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் பல கட்ட போராட்டத்துக்கு பிறகு கண்ணம்மாவுக்கு, பாரதி வீட்டில் வளரும் ஹேமா தான் தனது 2வது குழந்தை என்கிற உண்மை தெரிய வருகிறது. இந்த உண்மையை அறிந்ததும் கண்ணம்மா, பாரதி வீட்டுக்கு வருகிறார். அங்கு ஹேமா, அஞ்சலி, பாரதி, வேணு என அனைவரும் நின்று கொண்டிருக்கின்றனர்.
அப்போது, கண்ணம்மாவை பார்க்கும் ஹேமா சமையலம்மா என கூற, கண்ணம்மா ஓடி வந்து ஹேமாவை அணைத்து கொள்கிறார். பின்னர் ஹேமாவுக்கு முத்தமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணம்மா, நான் உனக்கு யாருனு தெரியுமா என கூற, பாரதி, வேணு எல்லாரும் சற்று அதிர்ச்சியுடன் கண்ணம்மாவை பார்க்கின்றனர். இதற்கு பின்பு அங்கு வரும் சௌந்தர்யா, கண்ணம்மா உண்மையை கூறி விடுவாரோ என விக்கித்து நிற்கிறார். இப்படி வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரசிகர்களை சற்று உற்சாகப்படுத்தி இருக்கிறது.