வங்கி ஊழியர் சங்கத்தினரிடம் நாளை பேச்சுவார்த்தை – என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்!
நாடு முழுவதும் இருக்கும் வங்கி ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் (ஜன.30 & ஜன.31) நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, டெல்லி இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினரிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள்
நாட்டில் வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் டெல்லி இந்தியன் வங்கி நிர்வாகியுடன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் வங்கி ஊழியர்களின் கோரிக்கை குறித்து முடிவு எடுப்பதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினரிடம் டெல்லி இந்தியன் வங்கி நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் முடிவில் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியதாவது, இந்திய வங்கிகள் சங்கம் நாளை (ஜன.31) தொழிற்சங்கங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் – விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
இந்த கூட்டத்தில் 5 நாள் வங்கிச் சேவை, பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர் சங்கத்தினரிடம் விவாதிக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.