Bank of Baroda-வில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
பேங்க் ஆஃப் பரோடா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கு என 05 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- BC supervisors பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree, M.Sc. (IT), BE (IT), MCN, MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு PSU வங்கியில் Chief Manager பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும், Bank Of Baroda வங்கியில் Clerk அல்லது அதற்கு சமமான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- BC supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Business Correspondent Supervisors பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
- இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.