பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் காலிப்பணியிடங்கள் – மாநில மொழிகளில் தேர்வு?
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என புது கோரிக்கை எழுந்துள்ளது.
வங்கிப்பணி தேர்வுகள்:
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வு அறிவிப்பை IBPS (வங்கிப் பணியாளர் தேர்வாணையம்) சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதில் 3000 கிளார்க் பணியிடங்கள் பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட 11 வங்கிகளில் காலியாக உள்ளதாக தேர்வு அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் மேலும் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு – நாளை முதல் அமல்!
இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. கிராமப்புற வங்கிகளில் உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதால் பொதுமக்கள் சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் நிலவுகிறது. எனவே மாநில மொழிகளில் வங்கிப்பணி தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் கிராமப்புற உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது.
போலீசிடம் வசமாக மாட்டிய வெண்பா, கண்ணம்மாவை நேரில் சந்திக்கும் பாரதி? அடுத்த எபிசோட்!
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் ஆராய்ந்து உள்ளூர் மொழிகளில் வங்கிப்பணி தேர்வுகளை நடத்துவது குறித்து எழுப்பப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய குழு ஒன்றினை ஏற்படுத்தி உள்ளது. இக்குழு 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை வங்கிப்பணியாளர் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.