T20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேச வீரர் தமீம் இக்பால் – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேச நட்சத்திர வீரர் தமீம் இக்பால் விலகுவதாக அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துளள்னர். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
உலகக் கோப்பை தொடர்:
ICC 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான போட்டி அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதில் வங்கதேச அணி முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. அந்தந்த நாட்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் செப்.19ம் தேதி ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு!
இந்நிலையில் T20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் இருந்து இடதுகை நட்சத்திர பேட்ஸ்மேன் தமீம் இக்பால் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலாக வேறு யாரையாவது தேர்ந்தெடுக்குமாறு அணி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார். கடந்த 15 முதல் 20 டி 20 போட்டிகளில் நான் விளையாடாததால், என்னுடைய இடத்தில களமிறங்கியவர் யாராக இருந்தாலும், உலகக் கோப்பை தொடரில் நான் அவர்கள் இடத்தைப் பிடித்தால் அது நியாயமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தமீம் இக்பால் பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார், ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல்-மே மாதத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முழங்கால் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டி 20 போட்டிகளில் இருந்து விலகினார். மேலும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி 20 தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்தத் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. பங்களாதேஷின் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் அவர் விலக்கப்பட்டுள்ளார். தற்போது வரை 78 டி 20 போட்டிகளில் அவர் ஒரு சதம் மற்றும் ஏழு அரை சதங்கள் உட்பட 1,758 ரன்களை குவித்துள்ளார்.