தேர்தலில் மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க – சுப்ரீம் கோர்ட்டு கடும் எதிர்ப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் மனித சின்னங்களை ஒதுக்க தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு:
கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் சுப்ரீம் கோர்ட்டில் விவசாயி உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிக்கு அளிக்கக்கூடாது எனவும், அந்த சின்னங்களை வாக்காளர்கள் தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது. எனவே மனிதர்கள் தொடர்புடைய தேர்தல் சின்னங்களை ஒதுக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம் – முன்னாள் படைவீரர்களுக்கு ஒரு வாய்ப்பு!
இந்த மனுவை நீதிபதிகள் கே.வி விஸ்வநாதன் மற்றும் சூரியகாந்த் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது, அப்போது இதற்கான வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், மனு அளித்தவர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்தது மேலும் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்துள்ளது. இந்த கோரிக்கையை மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவாக அளிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.