தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதியன்று பொது போக்குவரத்திற்கு தடை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா 3ம் அலைப்பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 9ம் தேதியன்று பொது போக்குவரத்து செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து
நாடு முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா 3ம் அலைப்பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழகத்திலும் தற்போது ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் இன்று (ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த காலகட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் நேரங்களில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், மருந்தகங்கள், பால், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர வார நாட்களில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து 50% இயக்கத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16 வரை 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
மேலும் ஜனவரி 9 தேதியன்று முழு ஊரடங்கின் போது மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணத்தின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கின் போது விமானம், ரயில் மற்றும் பேருந்து பயணத்திற்காக சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.