மாநிலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அசாம் மாநில முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி கட்டாயம்
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
2021 FIFA வின் சிறந்த வீரர் விருதை பெற்றார் லெவன்டோவ்ஸ்கி – ரசிகர்கள் உற்சாகம்!
ஏனெனில் தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும். அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமான முறையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை இந்தியாவில் 92% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். அத்துடன் 70% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள். ஆனால் இன்னும் சில முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். அதனால் இவர்களுக்காக சில விதிமுறைகளை விதித்து குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்து வருகிறது.
TN TRB காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முதுநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!
இந்நிலையில் அசாம் முதல்வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமல் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளார். இவர் தெரிவித்ததாவது, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்வது கட்டாயமில்லை. ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும் மற்றும் அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரத்தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.