தமிழகத்தில் அரசு விழாக்கள் நடத்த தடை, கூடுதல் கட்டுப்பாடுகள் – முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு விழாக்கள் நடத்த தடை, கூடுதல் கட்டுப்பாடுகள் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு விழாக்கள் நடத்த தடை, கூடுதல் கட்டுப்பாடுகள் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு விழாக்கள் நடத்த தடை, கூடுதல் கட்டுப்பாடுகள் – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் ஓமிக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு அரசு விழாக்கள் மற்றும் பொது மக்கள் கூடும் விழாக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓமிக்ரான்:

தமிழகத்தில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் கொரோனா தொற்று வேகமாக பரவ ஆரம்பித்தது. இதுவரை மாநிலம் முழுவதும் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தடுப்பு பணியாக மீண்டும் ஒரு ஊரடங்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய அரசு நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் ரூ.81000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31ம் தேதி கடைசி நாள்!

இதன் பேரில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வர் அவர்கள் அதிகரித்தும் வரும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசு விழாக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – விரைவில் பாடத்திட்டம் வெளியீடு!

அண்மையில் முதல்வர் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போன்ற மாநாடுகளை கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நடத்துவது கொரோனா நோய்த்தொற்றினை பரப்புவதற்கு சமம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் தடுப்பு பணியாக சமுதாய, கலாச்சார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!