TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – விரைவில் பாடத்திட்டம் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தேர்வாணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டம்:
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2022ம் ஆண்டு தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள், தேர்வு அறிவிப்புகள் மற்றும் தேர்வு வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பில் 2022-ம் ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இதில் வரும் பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த பிரிவில் சுமார் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து மார்ச் மாதம் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. குருப் 4 பிரிவில், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் உள்ளன. விஏஓ பிரிவில் கிராம நிர்வாக அலுவலர் பதவி உள்ளது
இந்நிலையில் குரூப் 4 தேர்வு பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த வகையில் தமிழ் பாடத்தில் 40 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் மதிப்பெண்கள் பெறும் போது அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜன.12 இல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி – பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு!
இதன் அடிப்படையில் முந்தைய ஆண்டு குரூப் 4 VAO தேர்வு பழைய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த ஆங்கில பாடம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய அதிகாரி ஒருவர் இணையதளங்களில் உள்ள குரூப் 4 தேர்வு பழைய பாடத்திட்டம் நீக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த புதிய பாடத்திட்டத்தில் புதிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு பாடங்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளார். இந்த புதிய பாடத்திட்டம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் . குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் தேர்வாணைய இணையதளத்திற்கு சென்று புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.