விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் மீது போலீசில் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன தெரியுமா?
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசியாக இருக்கும் குடும்ப பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்தலும் அடிக்கடி சில சமூக கருத்துக்களை எடுத்து சொல்லி சர்ச்சையில் சிக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஒரு காட்சியால் சீரியல் குழு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதைக்களம் தினமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார். வீட்டில் அடிக்கடி தாங்காமல் இருப்பதால் பாக்கியாவிற்கும் சந்தேகம் வந்துள்ளது. கோபி எப்போது சிக்குவார் என்பதே இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பக் கதையை மட்டுமே கொண்டு செல்லாமல் அவ்வப்போது சமூக விழிப்புணர்வு பற்றியும் கதையில் சில காட்சிகள் வைக்கப்படும். ஏற்கனவே இனியா பள்ளியில் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அதில் இருந்து பெண்கள் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது பற்றியும் கதையில் காட்டப்பட்டது. ஆனால் இப்படி சமூக விழிப்புணர்வு கருத்துக்களால் அடிக்கடி சில பிரச்சனைகளை சீரியல் குழு சந்தித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ராமமூர்த்திக்கு மருத்துவம் பார்க்க வந்த பிசியோதெரபிஸ்ட் மீது இனியா காதலில் விழுவதால் அது சரியானது அல்ல என புரிய வைக்க எழில் சில வசனங்களை பேசி இருப்பார். அதனால் குறிப்பிட்ட ஒரு தொழிலை தவறாக சித்தரித்து இருப்பதால் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.