விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவுடன் சேர்ந்த கோபி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுவதால் தொடர்ந்து TRPயில் நல்ல முன்னேற்றத்துடன் இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனுக்கு இரண்டு நாயகிகள் இருக்கும் நிலையில் கோபி ராதிகா பாக்கியாவின் படப்பிடிப்புத்தல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் முன்னணி சீரியல்கள் வரிசையில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் கோபி பாக்கியாவை ஏமாற்றி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் பழக்கத்தில் இருக்கிறார். ராதிகாவை திருமணம் செய்ய கோபி முடிவு செய்து இருக்கிறார்.
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம் – தொழில் முடக்கம்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் ராதிகாவுக்கு கோபியின் மனைவி பாக்கியா தான் என்ற உண்மை தெரியவில்லை. அதனால் தான் கோபியுடன் நெருக்கமாக பழகுகிறார். இவர்கள் மூவரும் ஒன்றாக சந்தித்து கொள்ளும் அன்று தான் கோபியின் உண்மையான குணம் தெரியவரும். ஆனால் கோபிக்கு ஆதரவாக குடும்பத்தினர் யாரும் இல்லை . இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடரும் கோபி – ராதிகா கதாபாத்திரத்தால் சீரியல் டி. ஆர்.பி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் உற்சாகம்!
கோபி ராதிகாவின் திருமணம் அன்று தான் சீரியலில் பெரிய திருப்பம் வரும் ஆனால் அது இப்போதைக்கு நடைபெற போவதில்லை என்பதால் ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கோபி ராதிகா பாக்கியா இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி எப்போது வரும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த புகைப்படம் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.