விவாகரத்திற்காக கோர்ட் படியேறும் பாக்கியா, கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்! மகிழ்ச்சியில் ராதிகா!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலமாக பல்வேறு எதிர்பாராத திரைக்கதையுடன், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்து வரும் எபிசோடுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பே நிலவி வருகிறது. இதன் அடிப்படையில் வெளியாகி உள்ள ப்ரோமோ அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சியில் குடும்பத்தினர்:
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஆக பார்க்கப்படுகிறது. இந்த சீரியல், டிஆர்பி ரேட்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் பாக்யாவின் கணவர் கோபி, தனது முன்னால் காதலை ராதிகாவுடன் வீட்டிற்கு தெரியாமல் பழகி வருகிறார். ஒரு கட்டத்தில், ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் கோபியின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவர், கோபியை கண்டிக்கிறார். இதுகுறித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல போன கோபி அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்.
லக்ஷ்மிக்காக கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதி, சந்தோசப்படும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ இந்த வாரம்!
இந்த நிலையில் சீரியலில் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் இருந்து கையெழுத்து வாங்குகிறார். இப்போது ராதிகாவின் வக்கீல் அந்த விவாகரத்து பத்திரத்தை கோர்ட்டில் பதிவு செய்துள்ளார் . இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் குடும்ப செலவுகள், ராமமூர்த்தியின் மருத்துவ செலவுகள், அதனால் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இருப்பினும் தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ராதிகா கோபிக்கு போன் செய்து கோர்ட்டில் இருந்து ஹியரிங் கடிதம் வந்து உள்ளது என்று கூறுகிறார்.
அப்போது அந்த கடிதத்தை ஜெனி வாங்கி பார்க்கிறார். அந்த நிலையில் பாக்கியா, கோபியின் அம்மா இது என்ன போஸ்ட் என்று கேட்கின்றனர். மேலும் அந்த கடிதத்தை எழில் வாங்கி பார்க்கிறார். அப்பொழுது விரைந்து வந்த கோபி எனக்கு வந்த கடிதத்தை நீ ஏன் வாங்குற என்று பரபரப்புடன் சொல்லி கடிதத்தை வாங்கி விட்டு செல்கிறார். அடுத்து ராதிகாவின் வக்கீல் நாளைக்கு முதல் ஹியரிங் உள்ளது நீங்களும் உங்க மனைவியும் கோர்ட்டுக்கு வந்திருக்கு என்று கூறினார். இந்த ப்ரோ மாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.