நடந்தேறிய கோபி, ராதிகா திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், அதன்பிறகு கோபியின் உண்மை குணத்தை இரு புறமும் அறிந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோபியின் சுயரூபம்:
பாக்கியலட்சுமி சீரியலில் தன் அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விடுகிறார். பாக்கியா தன் கணவரை நம்பி அதை என்ன என்று கூட பார்க்காமல் கையெழுத்து போட்டு விடுகிறார். அந்த சமயத்தில் கோபி சற்று இப்போது இந்த திருமணம் தேவை தானா என்று யோசிக்கிறார். ஆனால் ராதிகா இதை பற்றி கேட்கும் போது அவருக்கு பாக்கியா மற்றும் குடும்பத்தினரை பற்றி எந்த கவலையும் இல்லாமல் போகிறது.
தனக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த வாரம்!
விவாகரத்து பத்திரம் கிடைத்த பிறகு, ராதிகா மற்றும் கோபியின் திருமணத்திற்கு விரைவாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. ஆனால் இந்த பக்கம் கோபி வீட்டு செலவிற்கு கூட பணம் தராமல் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்வதை தெரிந்து கொண்ட கோபியின் அம்மா ஈஸ்வரி தன் நகைகள் அனைத்தையும் கொண்டு வந்து பாக்கியாவிற்கு கொடுக்கிறார். இதனால் அவரது ஆதரவும் பாக்கியாவிற்கு கிடைத்து விடுகிறது.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை வளைகாப்பு விழா” – வைரலாகும் ப்ரோமோ!
இந்த சூநிலையில், கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு இந்த விவரம் முழுவதும் கோபியின் குடும்பத்திற்கு தெரியவருகிறது. இதனால் மொத்த குடும்பமும் ஒடிந்து விடுகிறது. திருமணம் முடிந்த பிறகு தான் கோபியின் மனைவி பாக்கியா தான் என்பது ராதிகாவிற்கு தெரிய வருகிறது. பாக்கியாவை பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ள ராதிகா கோபி தன் மனைவியை பற்றி சொன்ன அனைத்தும் பொய் தான் என்று தெரிந்து கொள்கிறார். இதனால் கோபிக்கு இரண்டு பக்கமும் உண்மை தெரிந்து விடும் என்று தெரிகிறது.