விபத்தில் சிக்கும் ராதிகா, உதவி செய்யப் போகும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி அப்பா ராதிகா அம்மாவிடம் சண்டை போட்டதால் இனிமேல் இந்த வீட்டுப்பக்கம் வராதீங்க என ராதிகா அம்மா சொல்கிறார். அதை தொடர்ந்து ராதிகாவுக்கு விபத்து ஏற்பட மீண்டும் கோபி அவர் வாழ்க்கைக்குள் வருகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ராதிகா கோபி உண்மையை தெரிந்த ராமமூர்த்தி கோபத்துடன் ராதிகா வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கே ராதிகா இல்லை, அதனால் அவரது அம்மாவிடம் உங்க மகளை கண்டித்து வைங்க இனிமேல் என் மகனுடன் அவள் பழக கூடாது என் பையனிடம் சொல்லி அவன் கேட்கவே இல்லை. கல்யாணம் ஆன ஆளுடன் அப்படி என்ன பழக்கம் என சண்டை போடுகிறார்.
விஜய் டிவி TRP ரேட்டிங்கை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் – “சூப்பர் சிங்கர் ஜூனியர் 8” ப்ரோமோ ரிலீஸ்!
பின் கோபி வந்ததும் ராதிகா அம்மா இனிமேல் இந்த வீட்டிற்கு வராதீங்க என் மகள் அப்படி இல்லை அவளுக்கு கேட்ட பெயர் வர கூடாது என சொல்கிறார். அதனால் கோபி கோவமாக வீட்டிற்கு வர ராமமூர்த்தி இனிமேல் ராதிகா வீட்டிற்கு போக மாட்டேன் என சத்தியம் வாங்குகிறார். இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டின் வாசல் வரை வந்து நிற்கும் கோபி உள்ளே போகலாமா? வேண்டாமா? என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பல திருப்பங்கள் நிகழ இருக்கிறது.
மீண்டும் சீரியலில் கர்ப்பமான கண்ணம்மா? யாருடைய கனவு இது – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ராதிகாவுக்கு விபத்து ஏற்பட தனியாக இருக்கும் மயூரா என்ன செய்வது என தெரியாமல் கோபிக்கு போன் செய்கிறாள். அது தான் சமயம் என நினைத்து கோபி ராதிகா வீட்டிற்கு வருகிறார். மேலும் ராதிகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். தனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை அவர் மீறி விடுகிறார். இந்த விஷயம் கோபியின் அப்பாவிற்கு தெரிந்து அவர் ராதிகாவிடம் பாக்கியா தான் கோபி மனைவி என சொல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.