‘ராதிகா உடன் பழக மாட்டேன்’ கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி – “பாக்கியலட்சுமி” அடுத்து வருவது!

0
'ராதிகா உடன் பழக மாட்டேன்' கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி -
'ராதிகா உடன் பழக மாட்டேன்' கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி - "பாக்கியலட்சுமி" அடுத்து வருவது!
‘ராதிகா உடன் பழக மாட்டேன்’ கோபியிடம் சத்தியம் வாங்கும் ராமமூர்த்தி – “பாக்கியலட்சுமி” அடுத்து வருவது!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தொழில் செய்ய தனியாக இடம் பார்த்து விடுகிறார். மேலும் கோபி அலுவலகத்தை ராதிகா பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை பற்றிய கதை கொண்டுள்ளது. இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தை மையமாக கொண்டே கதை சென்று கொண்டிருக்கிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியா வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்து தனக்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுக்கிறார். அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு வீட்டிற்கு செலவு செய்கிறார். அவரது கணவர் கோபி பொறுப்பான அப்பாவாக இருக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வில்லி வெண்பா பரீனா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஆனால் பாக்கியாவிடம் மட்டும் நல்ல கணவராக இல்லை. அவர் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் பழகி வருகிறார். இந்நிலையில் இது குறித்து கோபி அப்பாவிற்கு தெரிந்து விட அவர் கோபியை கண்டிக்கிறார். ஆனால் கோபி கேட்பதாக இல்லை அப்பாவை எதிர்த்து நிற்க, தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் பாக்கியா பெயரில் எழுதி வைக்கிறார். மேலும் பாக்கியா தொழில் செய்ய அவருக்கு இடம் பார்த்து கொடுக்கிறார். அதை எல்லாம் பார்த்து கோபி கோபப்படுகிறார்.

திருமணத்திற்கு பின் புதிய சீரியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரேயா அஞ்சன் – அதுவும் இந்த சேனலில்? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராதிகா வீட்டிற்கு போக கூடாது அவளை பார்க்க கூடாது என சத்தியம் செய்து கொடு என ராமமூர்த்தி கேட்க, ஏன் எப்போ பார்த்தாலும் என் வாழ்க்கையை கெடுக்குறீங்க என் கோபி கேட்கிறார். வாழ்க்கையா உன் வயசு என்ன இனிமேல் என்ன வாழ்க்கை உனக்கு இருக்கிறது. உனக்கு மூன்று பிள்ளைங்க இருக்கு அவங்க வாழ்க்கை பற்றி தான் நீ யோசிக்க வேண்டும். மூத்தவனுக்கு கல்யாணம் முடிந்து விட்டது, ஆனால் நீ இப்படி பண்ணிட்டு இருக்க என ராமமூர்த்தி சொல்கிறார். நீ சத்தியம் செய்து கொடுக்காமல் இருந்தால் நாளைக்கு நான் நேராக ராதிகா வீட்டிற்கு போவேன் என ராமமூர்த்தி சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!