சமையல் ஆர்டரை சிறப்பாக முடிக்கும் பாக்கியா, நன்றாக இருந்தால் தான் காசு என சொன்ன தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
சமையல் ஆர்டரை சிறப்பாக முடிக்கும் பாக்கியா, நன்றாக இருந்தால் தான் காசு என சொன்ன தொழிலதிபர் - இன்றைய
சமையல் ஆர்டரை சிறப்பாக முடிக்கும் பாக்கியா, நன்றாக இருந்தால் தான் காசு என சொன்ன தொழிலதிபர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
சமையல் ஆர்டரை சிறப்பாக முடிக்கும் பாக்கியா, நன்றாக இருந்தால் தான் காசு என சொன்ன தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இன்னும் சாப்பாடு வரவில்லை என தொழிலதிபர் சொல்லிக் கொண்டிருக்க, பாக்கியா சரியான நேரத்தில் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறார். பின் சாப்பாடு நன்றாக இருந்தால் தான் காசு கொடுப்பேன் என முதலாளி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், நிகழ்ச்சி தொடங்கிவிட இன்னும் சாப்பாடு வரவில்லை என தொழிலதிபர் சொல்கிறார். உடனே அவரது மனைவி போன் செய்கிறார். ஆனால் பாக்கியா போனை எடுக்கவில்லை. அவர் வந்து கொண்டிருப்பார். அதான் போனை எடுக்கவில்லை என அவரது மனைவி சொல்ல, சரியான நேரத்தில் பாக்கியாவின் வண்டி வருகிறது. இதோ வந்துவிட்டார்கள் என, பின்னால் பாக்கியா மற்றும் அவருடன் சேர்ந்து சமையல் செய்தவர்கள் வருகின்றனர்.

கண்ணனை கோவிலில் ஒதுக்கும் அண்ணன்கள், அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – இன்றைய எபிசோட்!

பின் சரியான நேரத்தில் வந்துவிட்டீர்கள் என சொல்ல, சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் அப்போது தான் காசு கொடுப்பேன் என முதலாளி சொல்கிறார். பின் பாக்கியா பதட்டம் அடைகிறார். செல்வியும் என்ன அக்கா இப்படி சொல்கிறார்கள் என சொல்ல அமிர்தா அதெல்லாம் ஒன்றும் நடக்காது என சொல்கிறார். பின் அனைவருக்கும் சாப்பாடு பரிமாற, அனைவரும் சாப்பிடுகின்றனர். அப்போது அவர் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கிறது என சொல்கிறார்.

அப்போது தான் பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது. மறுபக்கம் அமிர்தா வீட்டில் எழில் அம்மா அப்பாவிடம் நகைச்சுவை சொல்லி சிரிக்கவைக்க அமிர்தா ஒரு மாதிரி இருக்கிறார். எழில் அப்பாவை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போகிறேன் என சொல்ல, வெளியே வந்த அமிர்தா எனக்கு நீங்க நண்பரா இருந்தால் மட்டும் போதும் என சொல்கிறார். பின் எழில் ஏன் இப்படி சொன்னார் என புரியாமல் இருக்கிறார். பின் பாக்கியா காசு வாங்க வருகிறார்.

செம்பருத்தி சீரியல்ல இனி பழைய ஆதி வர்றாரா? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பணத்தை அக்கவுண்டில் போடுங்க என சொல்ல, பாக்கியா நன்றி சொல்லிவிட்டு வருகிறார். பாக்கியா 2 லட்சத்து 75 ஆயிரம் பில் கொடுக்க முதலாளி 3 லட்சம் பணம் கொடுக்க சொன்னதாக சொல்கிறார். பாக்கியாவும் செல்வியும் அதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். வீட்டில் எழில் அமிர்தா சொன்னதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். பாக்கியா ஏன் வருத்தமாக இருக்கிறாய் என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல, பாட்டி எங்கே என எழில் கேட்கிறார்.

மாமா இல்லாமல் இருந்தால் என்னால் எதுவும் பண்ணிருக்க முடியாது என சொல்ல, அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார். எல்லாரும் பணம் வேண்டும் என கேட்பதாக சொன்னதாக சொல்கிறார். உடனே தாத்தா பணம் கொடுக்காமல் இருக்க போகிறோமா என சொல்ல எல்லாருக்கும் நாளைக்கு பணம் கொடுத்துவிடலாம் என சொல்கிறார். நாளைக்கு சென்று பணம் எடுத்து கொடுத்துவிடலாம் என சொல்ல, பணத்தை கையில் கொடுத்துவிடலாம் என பாக்கியா சொல்கிறார்.

இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? – புதிய சர்ச்சை!

எனக்கே பணத்தை கையில் வைத்து பார்க்க வேண்டும் என சொல்ல, இந்த பணத்தை வாங்க என்ன கஷ்டம் எல்லாம் நீ பட்டிருக்க என தாத்தா சொல்ல, அமிர்தாவிடம் பேச வேண்டும் போன் போட்டுக் கொடு என பாக்கியா சொல்கிறார். பின் எழில் ஒரு மாதிரி ஆக நானே போன் செய்கிறேன் என பாக்கியா போன் செய்கிறார். அமிர்தாவிடம் காசு வாங்கியாச்சு என சொல்ல, நீ இல்லாமல் இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது என பாக்கியா சொல்கிறார். பின் எழிலிடம் போனை கொடுக்க அமிர்தா போனை வைத்துவிட்டு அம்மா கூப்பிட்டதாக செல்கிறார். உடனே எழில் அமிர்தா பேசாதத்தை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!