ராதிகாவிடம் போனில் பேசும் கோபி, சந்தேகத்துடன் பார்க்கும் பாக்கியா – சீரியலில் சூப்பர் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியை பற்றிய உண்மையை எழில் தாத்தாவிடம் சொல்ல, பொங்கலுக்கு குடும்பத்துடன் கிராமத்திற்கு செல்ல ராமமூர்த்தி முடிவு செய்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வெளியாகி வருகிறது. கோபி பற்றி தெரியாமல் குடும்பத்தினர் இருந்த நிலையில் முதலில் எழிலிற்கு அப்பா பற்றிய உண்மை தெரிய வருகிறது. ஆனால் எழில் அப்பாவை எச்சரித்து விட்டு கோபி திருந்தியதாக நினைக்கிறார். ஆனால் கோபி திருந்தியதாக இல்லை, மேலும் கோபியின் தந்தை ராமமூர்த்திக்கு ராதிகா தான் கோபியின் காதலி என தெரிந்து அவர் கோபியை பலமுறை கண்டிக்கிறார். ஆனால் மீண்டும் பழையபடியே இருந்து வருகிறார்.
ஐஸ்வர்யாவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு வந்த புதிய பிரச்சனை – அதிர்ச்சியில் மீனா, தனம்!
எனவே ராமமூர்த்தி கோபியிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். அதனால் எழில் இது பற்றி தாத்தாவிடம் கேட்க அவர் உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். எழில் எனக்கு உண்மை தெரியும் என சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என தாத்தா சொல்கிறார். இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பொங்கல் பண்டிகை வருவதால் ராமமூர்த்தி நம்ம சொந்த கிராமத்திற்கு போகலாம் என சொல்கிறார். ஆனால் கோபி வரமாட்டேன் என சொல்ல கண்டிப்பாக வர வேண்டும் என ராமமூர்த்தி சொல்கிறார்.
நடிகர் சஞ்சீவ் & ஆலியா மானஸா நடிப்பில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீசன் 2? ப்ரோமோ ரிலீஸ்!
மறுபக்கம் ராதிகா உடன் கோபி இருக்க, பொங்கலுக்கு இங்கே இருக்க வேண்டும் என மயூரா சொல்கிறார். அதனால் கோபி என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் கோபி கிராமத்திற்கு சென்று குடும்பத்துடன் சந்தோசமாக இல்லாமல் தனியாகவே இருக்கிறார். பாக்கியா ராமமூர்த்தி அனைவரும் பொங்கலுக்கு தேவையான வேலைகளை செய்கிறார்கள். கோபி குடும்பத்துடன் பேசாமல் எப்போதும் போனில் பேசிக் கொண்டே இருப்பதால் அதை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.