ஐஸ்வர்யாவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு வந்த புதிய பிரச்சனை – அதிர்ச்சியில் மீனா, தனம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது 4 மருமகள்கள் இருப்பதால் எப்போது யாரால் பிரச்சனை வரும் என்று ஒரே பதட்டமாக செல்கிறது. அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பிகள் 4 பேருக்கும் திருமணம் முடிந்து தற்போது குடும்பம் பெரியதாகி உள்ளது. இதனால் பிரச்சனைகள் அதிகமாவதும் வழக்கம் தானே. மிகவும் ஒற்றுமையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் சமீப காலமாக அதிக அளவில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. வீட்டின் கடைக்குட்டி தம்பியான கண்ணன் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கண்ணன் வீட்டில் அனைவரும் செல்லமாகவும், எப்போதும் கிண்டல், கேலி செய்து கொண்டும் இருப்பான்.
விஜய் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பாரதி கண்ணம்மா” ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
இதனால் எப்போதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு கலகலப்பாக இருக்க கண்ணன் தான் முக்கிய காரணமாக இருப்பான். தற்போது கண்ணன் திருமணம் செய்து கொண்டது வீட்டில் யாருக்கும் பிடிக்காததால் சற்று அமைதியாக இருந்து வருகிறான். ஆனால் ஐஸ்வர்யா அனைவரிடமும் வம்பு இழுத்து வருவதால் அவ்வப்போது சிலர் கடுப்பாவதும் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை வர இருப்பதால் வீட்டில் பரண் மீது உள்ள பொருட்களை எடுக்க வேண்டும் என்று தனம் கூற, முல்லை எதேச்சையாக அதுக்கு தான் நம்ம கண்ணன் இருக்கான்ல என்று கூறுகிறார்.
இதனால் ஐஸ்வர்யா கோபமடைந்து கண்ணன் இன்னும் சின்ன பையனா, கதிர் மாமாவ கூப்பிட்டு எடுக்க சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் கடை பையனை கூப்பிட்டு எடுக்கலாம் வர சொல்லு என்று தனம் சொல்ல, நான் தான் இருக்கேன்ல அப்புறம் எதுக்கு அவனை வர சொல்லணும் என்று கண்ணன் சொல்கிறான், நீ எடுக்க வேண்டாம் என்று தனம் சொல்லி விடுகிறார். பிறகு நடந்ததை மீனா கண்ணனிடம் சொல்ல, கண்ணன் பரண் மீது ஏறுவதற்கு செல்வதை பார்த்து தனம் சத்தம் போடுகிறார்.
விஜய் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பாரதி கண்ணம்மா” ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
அதற்கு கண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி தான் எப்படி இருந்தேனோ அப்படி தான் இப்பொழுதும் இருப்பதாகவும், எப்போதுமே உங்க கண்ணன் தான் என்றும் கூறி அழுகிறான். இதனால் வீட்டில் உள்ளவர்களும் கவலை அடைகின்றனர்.