பாக்கியாவை அம்ரிதா வீட்டிற்கு அழைக்கும் எழில் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
விஜய் தொலைக்காட்சியில் பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எவ்வாறு எழில் பணத்தினை கண்டுபிடித்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் பெண்களை அதிகளவு ரசிகர்களாக கொண்ட சீரியலில் ஒன்றாக பார்க்கப்படுகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது பாக்கியா கஷ்டப்பட்டு தனது வீட்டில் அருகில் இருக்கும் பெண்களுடன் சேர்ந்து ஒரு பெரிய சமையல் ஆர்டர் எடுத்து செய்கிறார். அதனை வெற்றிகரமாகவும் முடித்து விடுகிறார். இதனால் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அவருக்கு சமையல் ஆர்டரின் ஊதியமாக 3 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அதனை பேங்கில் இருந்து பேசுகிறோம் என்று கூறிவிட்டு ஒருவர் திருடி விடுகிறார். இதனால் வீட்டினர் அதிர்ச்சி அடைந்து இது அனைத்தும் பாக்யாவின் தவறுதான் என்று கூறி விடுகின்றனர்.
புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
அந்த பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என்றும் எல்லோரும் கூறுகிறார்கள். இதனால் கோபமடையும் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறு என்று கூறி விடுகிறார். அப்போது சரியாக அந்த நேரத்தில் பணத்துடன் வருகிறார் எழில். எழிலுக்கு அந்த நேரத்தில் சரியாக பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தனது ப்ரொடியூசர் இடம் முன்பணமாக கேட்டு இருப்பாரோ என்பது போன்றும் அல்லது உண்மையிலேயே திருடியவரை கண்டுபிடித்து விட்டாரா என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.
அனுவை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லும் பாட்டி, குஷியில் ரோஜா & அர்ஜுன் – பரபரப்பான அடுத்த எபிசோட்!
அதேபோல் கோபி 3 லட்சம் ரூபாய்க்கு தனது அம்மாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதை பொறுக்க முடியாமல் எழில் பாக்கியாவை அமிர்தா வீட்டிற்கு செல்லலாம் என்று அழைக்கிறார். சிறிது நாட்களுக்கு நாம் அங்கேயே இருக்கலாம் என்றும் கூறுகிறார். பாக்கியா இல்லாமல் இருந்தால் தான் வீட்டினருக்கு அவரது அருமை தெரியும் என்றும் கூறுகிறார். அப்படி அமிர்தா வீட்டிற்கு பார்க்க சென்றுவிட்டால் கண்டிப்பாக குடும்பத்தினர் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்று விடுவர். இதனால் அடுத்து வரும் எபிசோடுகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது