கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, ராதிகாவுடன் பார்த்ததை கூறிய செல்வி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை வேறு பெண்ணுடன் பார்த்ததை பற்றி செல்வி பாக்கியாவிடம் சொல்கிறார். ஆனால் பாக்கியா நம்பாமல் இருக்கிறார். அதன் பின்னர் கோபியின் நடவடிக்கையை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை துணி கடையில் பார்த்துவிட்டு செல்வி வேகமாக ஓடி சென்று பாக்கியாவிடம் விசயத்தை சொல்ல வருகிறார். அப்போது பாக்கியா என்னாச்சு செல்வி டிரஸ் எடுக்க போன காசை உன் புருஷன் எடுத்துவிட்டானா என கேட்கிறார். என் புருஷனை பத்தி சொல்லாதே உன் புருஷன் ஒழுங்கா என கேட்கிறார். என்ன சொல்ற செல்வி என பாக்கியா கோபப்படுகிறார். என்னை சொல்ல விடு என செல்வி சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் சீமந்த நிகழ்ச்சி – வைரலாகும் புகைப்படம்!
உன் புருஷனை கடையில் பார்த்தேன் வேறு பெண்ணுடன் வந்திருந்தார் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் பாக்கியா அது அவராக இருக்காது என சொல்ல, நம்ம சாரை எனக்கு தெரியாத என சொல்கிறார். அந்த பெண்ணுடன் சிரிச்சு சிரிச்சு பேசுகிறார் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா நம்பாமல் செல்வியை திட்டி அங்கிருந்து போக சொல்கிறார்.
பின்னர் எழில் அமிர்தா வீட்டு பக்கம் வந்து அவரை பிரிந்து தவித்து வருகிறார். அவருடன் இருந்த நல்ல நினைவுகளை பற்றி நினைத்து பார்க்கிறார். இன்னும் 1 வாரத்தில் வந்துவிடுவார் என நினைக்கிறார். பின்னர் பாக்கியா செல்வி சொன்னதை நம்பாமல் இருக்க ஜெனி வேலையை விட்டு வருகிறார். ஜெனிக்கு காபி வேண்டுமா என சொல்ல பாட்டி இனிமேல் நீ ஒரு வேலையும் பார்க்க வேண்டாம் என சொல்கிறார். ஆனால் பாக்கியாவை சென்று வேலை பார்க்க சொல்ல பாக்கியா அதை நினைத்து வருத்தப்படுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர் கோபி வந்துவிட செழியன் கோபியை பார்க்க அலுவலகத்திற்கு சென்றதாகவும் அப்போது கோபி அங்கே இல்லை என சொல்கிறார். உடனே செல்வி சொன்ன நேரத்தில் கோபி அங்கே இல்லை என நினைத்து சந்தேகப்படுகிறார். பின்னர் இனியா பாக்கத்தில் வர கோபியிடம் இருந்து வேற வாசனை வருகிறது. உடனே பாக்கியாவிற்கு ரொம்ப சந்தேகம் வருகிறது. கோபி தண்ணீர் குடிக்க அங்கே வர பாக்கியா அருகில் சென்று நுகர்ந்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.