‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபர் நெகிழ்ச்சி – மக்கள் கொடுத்த வரவேற்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபர் அந்த சீரியலில் இருந்து விலகியதையடுத்து, ராதிகா ரோலுக்கு மக்கள் தனக்கு கொடுத்த ஆதரவு குறித்த நெகிழ்ச்சியான தகவல்களை பதிவிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி ஜெனிபர்
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, சுமார் 300 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர் ‘பாக்கியலட்சுமி’. இந்த தொடர், பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது குழந்தைகளின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் அம்மா, மதிக்காத கணவன், சண்டைக்கார மாமியார் என சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் தனக்கான அடையாளத்தை உருவாக்க போராடும் ஒரு பெண்ணின் பயணம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் ஆகும்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை அனுவுக்கு திருமணம், வைரலாகும் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!
மேலும் ஒவ்வொருவரின் வீட்டில் இருக்கும் அம்மாக்களை பிரதிபலிப்பதாக இந்த ‘பாக்கியலட்சுமி’ என்ற கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இத்தொடரில் நடிகை சுஜிதா, திவ்யா, நேஹா, ரேஷ்மா, விஷால், ஆர்யன் போன்ற பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபருக்கு மக்கள் அமோகமான ஆதரவுகளை கொடுத்திருந்தனர்.
இருப்பினும் சில மாதங்களுக்கு முன்னதாக நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரம் வரும் நாட்களில் வேறு விதமாக பயணிக்க இருப்பதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதையடுத்து ராதிகா ரோலில் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு குறித்தும், அந்த தொடரில் இருந்து விலகியவுடன் ரசிகர்களின் மனநிலை குறித்தும் பேசியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக ஜெனிபர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாக்கியலட்சுமி தொடருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நான் சீரியலில் இருந்து விலகியதும் பல ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் குவிந்தது. அதன் மூலம் ராதிகா என்ற ரோலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு குறித்து அறிந்து கொண்டேன். குறிப்பாக, ரசிகர்கள் சிலர், நான் தொடரை விட்டு விலகியதால் இனி பாக்கியலட்சுமி சீரியலை பார்க்க மாட்டேன் எனவும், அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கவும் கூறியிருந்தனர்.
தவிர, சிலர் நான் தொடரை விட்டு விலகியதை அறிந்ததும் கண்ணீர் விட்டதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலில் நான் நடித்து வந்த கதாபாத்திரத்தில் மேலும் தொடர எனக்கு விருப்பம் இல்லை. அது போன்ற ரோல்களை தவிர்க்க விரும்புகிறேன். இனி வரும் நாட்களில் நல்ல கதையம்சம் உள்ள தொடர்களை தேர்வு செய்து நடிப்பேன். இதுவரை ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி’ என கூறியுள்ளார்.