புதிதாக வண்டி வாங்க ஆசைப்படும் பாக்கியா – கோபி அனுமதிப்பாரா? இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று ஜெனி வீட்டில் உள்ளவர்களிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். அதனை அடுத்து பாக்கியவை புதிய வண்டி வாங்க சொல்லி அவரது மாமனார் ஊக்கப்படுத்துகிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனி பாக்கியவிடம் வந்து பிளாட் விவகாரம் குறித்து புரிய வைக்கிறார். செழியன் தனது அப்பா கோபியை நினைத்து மிகவும் பயப்படுவதாகவும் அவரை அனைவரும் மன்னிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். செழியன் இன்னும் பிளாட் வாங்கவில்லை என்றும் ஜெனியின் அம்மா தான் தவறாக புரிந்து கொண்டார் என்றும் தெரிவிக்கிறார். இப்படியாக இருக்க, அம்ரிதாவின் அம்மாவிடம் சிலர் நகை பறிக்க வருகின்றனர்.
ஜூலை 19 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க கோரிக்கை – உபி., பள்ளிகள் சங்கம்!
அவர்களிடம் இருந்து அவ்வழியாக செல்லும் எழில் பார்த்து காப்பாற்றுகிறார். பின், இருவரும் அம்ரிதாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அம்ரிதாவின் வீடு என்பது தெரியாமல் எழில் அவரது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு அம்ரிதா வந்ததும் எழில் அதிர்ந்து விடுகிறார். இருவரும் தெரியாதது போல காட்டி கொள்கின்றனர். பின், வீட்டை விட்டு வெளியே வந்ததும் அம்ரிதா அவரிடம் தனது அம்மாவை காப்பாற்றியதற்கு நன்றி கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், பாக்கியா வீட்டில் அவரது மாமனார் பாக்கியவை வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். அதே போல அப்படி கற்று கொண்டால் புதிய வண்டி அவருக்கு என்று தனியாக வாங்கி விடலாம் என்றும் கூறுகிறார். இதனை கேட்டதும் பாக்கியாவின் மாமியார் கோபத்துடன் எழுந்து சென்று விடுகிறார். பின், இரவு அம்ரிதா தனது அப்பாவிடம் எழில் அம்மாவை காப்பாற்றியதை பற்றி கூறுகிறார். எழில் பற்றியும் கூறி விடுகிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இப்படியாக இருக்க, அம்ரிதா எழில்க்கு போன் செய்து எழில் குறித்து வீட்டினரிடம் கூறி விட்டதாக கூறுகிறார். இதனால் எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.