பாக்கியா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் ராதிகா – வாயை மூடி கொண்டு வேடிக்கை பார்க்கும் கோபி!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ஆரம்பத்தில் இருந்து நல்லவராக மட்டுமே காட்டப்பட்ட நிலையில், இனி ராதிகா வில்லியாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவை அனைத்தையும் கோபி வேடிக்கை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளார்.
ராதிகாவின் கோவம்:
பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்த சமயத்தில் இருந்து மக்களின் அதிக பட்ச வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஒரு சாதாரண குடும்ப பெண் இதுபோன்ற சூழலில் என்ன என்ன செய்வாரோ அதன் படியே கதை நகர்கிறது. ஆரம்பத்தில் ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக, நல்ல தோழியாக இருந்து வந்தார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்று தெரிந்த பிறகும், கூட குற்ற உணர்ச்சியில் தவித்து வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் ராதிகாவின் அம்மா, மீண்டும் மீண்டும் பாக்கியா மற்றும் அவரது குடும்பத்தை பற்றி தவறாக சொல்லி வந்தார். இதை தவிர ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு வந்து மோசமாக பேசி, சண்டை போட்டு, சாபம் கொடுத்து சென்றார். இதனால் ராதிகா கோபி குடும்பத்தை வெறுக்க ஆரம்பித்து விட்டார். கல்யாணம் ஆன பிறகு தான் இதன் தீவிரம் அதிகரித்தது. கோபி சொல்வதை எதையும் ராதிகா கேட்பதில்லை.
திருமணம் வரை சென்று நின்று போன பிக் பாஸ் ஆயிஷாவின் திருமணம்.. முன்னாள் காதலர் இவர் தானா?
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது ஒரு படி மேலே சென்று பாக்கியாவின் எதிர் வீட்டிற்கு ராதிகா கோபியுடன் குடி வந்துள்ளார். இதற்கு மேலும், அதிரடியாக கோபியின் பெயரில் தான் இந்த வீடு உள்ளது. அதனால் இது எங்களுக்கு தான் சொந்தம். மரியாதையா எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று ராதிகா, கோபியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் விரட்டுகிறார். இதற்கு கோபி எதிர்ப்பு தெரிவிக்க, உங்களுக்கு நான் முக்கியமா?அவுங்க தான் முக்கியமா? என்று கேள்வி கேட்டு அடக்குகிறார் ராதிகா. கோபியும் நடக்கும் அனைத்தையும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.